கேலோ இந்தியா விளையாட்டு பதக்கம் வென்றவர்கள் திருத்தப்பட்ட அளவுகோலின் படி இனி அரசு வேலைகளுக்கு தகுதி பெற்றவர்கள் என்று விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், அரசு வேலை தேடும் விளையாட்டு வீரர்களுக்கான தகுதி அளவு கோள்களில் திருத்தங்களை செய்துள்ளது.

இந்த அற்புதமான நடவடிக்கை காரணமாக இனி பல்கலைக்கழகம், பாரா மற்றும் குளிர்கால விளையாட்டுப் போட்டி என அனைத்து கேலோ விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கும் அரசு வேலைகளை பெறுவதற்கான தகுதியை விரிவு படுத்துவதாக கூறியுள்ளார்.