இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று போபால் – டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்த நிலையில், இந்த மாதத்தில் மேலும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஏப்ரல் 8ல் கோவை – சென்னை, ஏப்ரல் 10ல் டெல்லி -ஜெய்ப்பூர் இடையே ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும், இம்மாத இறுதியில் ராஞ்சி -பாட்னா மற்றும் ஹைதராபாத் – திருப்பதிக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.