பீகாரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பீகாரின் சசரம் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநவமி ஊர்வல நேரத்தில் சசரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல் வீச்சு போன்ற சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தணிந்த நிலையில் மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.