மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் கோயிலில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது, கிணறு தடுப்பு இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானவர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர். உடனடியாக அங்கு விரைந்த  மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏற்கனவே பலரும் பணியான நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 18 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். கிணறின் மேலிருந்து இரும்பு தடுப்பு மீது பக்தர்கள் நின்று தரிசனம் செய்த போது, பாரம் தாங்காமல் தடுப்பு சரிந்ததில் பக்தர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.