உத்திர பிரதேசம் மாநிலம் சோன்பத்ராவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குஸ்பர்வா பகுதியில் உள்ள கதிஹாடா தோலா கிராமத்தில் பழங்குடியின இளைஞர் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் வாயில் மற்றொரு இளைஞர் சிறுநீர் கழித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இது எப்போது நடந்தது என்பது தெரியவில்லை என்றாலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து உள்ளூர் காவல்துறையினர், “சிறுநீர் கழித்த நபரை கைது செய்துள்ளனர் . இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டவரும், பாதிக்கப்பட்டவரும் நண்பர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.