தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனக்கு அரியவகை வியாதி இருப்பதாக கூறியுள்ளார். அதாவது நடிகை அனுஷ்காவுக்கு சிரிப்பு வந்தால் அதை கட்டுப்படுத்தவே முடியாதாம். சிரிப்பது ஒரு வியாதியா என்று கேட்டால், நான் 15 முதல் 20 நிமிடங்கள் வரை விடாமல் சிரித்துக் கொண்டே இருப்பேன். ஏதாவது ஒரு நகைச்சுவையை பார்த்துவிட்டால் நான் விடாமல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரிப்பேன். படப்பிடிப்பு தளத்தில் எனக்கு சிரிப்பு வந்துவிட்டால் அடக்கவே முடியாது. அந்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டிய சூழல் தான் ஏற்படும்.

நான் சிரித்து கொண்டிருக்கும் நேரத்தில் படப்பிடிப்பில் இருப்பவர்கள் டிபன், ஸ்னாக்ஸ் போன்ற வேலைகளை முடித்துக் கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகை அனுஷ்காவுக்கு சிரிப்பு வியாதி இருக்கிறது என்பது ரசிகர்கள் மத்தியில் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை சமந்தா, ஸ்ருதிஹாசன், தீபிகா படுகோனே, மம்தா மோகன்தாஸ் போன்ற நடிகைகளும் அரியவகை நோயினால் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது அனுஷ்காவுக்கும் அரியவகை நோய் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.