தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்பு நடித்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் நடிகர் அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு கதை பிடிக்காததால் இயக்குனர் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் , அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோனதால் எப்படியாவது ஒரு நல்ல படத்தை இயக்கி தன்னை நிரூபிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நடிகர் விஜய் சேதுபதியிடம் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு ஆக்சன் கதையை கூற அவருக்கும் கதை பிடித்து விட்டதால் படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறாராம். நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போதும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணையும் படத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.