பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்துக்காக அர்ப்பணியுங்கள் என்ற கருப்பொருளில் வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், பட்டிமன்றம் மற்றும் வினாடி வினா போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.