திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போனுக்கு தடைவிதிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இதனிடையே நேற்று பழனி முருகன் கோவிலுக்கு உட்பட பாதவிநாயகர் கோவில், மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய மூன்று இடங்களில் பக்தர்கள் தங்களது செல்போனை ரூ.5 கட்டணம் செலுத்தி வைத்துக்கொள்ளவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அப்பகுதிகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.