நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த கோபிகா, ரோஷினி மற்றும் வெற்றி அலகன் ஆகிய மூன்று இளம் மருத்துவ மாணவர்களின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தவறு இழைத்த அமைப்புகளின் பொறுப்பற்ற தன்மையால் அப்பாவி மாணவர்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடின உழைப்புக்குரிய மரியாதை கிடைக்கும் வகையிலும், தேர்வுகள் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் முழுமையான கல்விச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்காகவே தங்களது போராட்டம் தொடர்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
LoP Shri @RahulGandhi met the families of Gopika, Roshini, and Vetri Anandan- three young medical aspirants from Tamil Nadu whose lives were lost following the NEET paper leak and the cancellation of the examination.
Why should honest, hardworking students pay the price for a… pic.twitter.com/xHUUEo9y8u
— Congress (@INCIndia) August 2, 2026
“>
மாணவர்களிடம் மன்னிப்பு கேட்பதை விடுத்து, அவர்களுக்கு உண்மையை விளக்குவதும், நீதி வழங்குவதும், அரசு தனது தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்பதுமே தற்போதைய அவசியமான தேவையாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
