தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை ரயிலடி பகுதியில் பைசல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பழைய வீட்டை புதுப்புக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்று வீட்டை புதுப்பிக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். முதல் தளத்தில் நின்று கொண்டு தொழிலாளர்கள் மேலே உள்ள கட்டிடங்களை இடித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் மணிகண்டன்(30), குமார்(23) ஆகியோர் மீது கட்டடத்தின் ஸ்லாப் ஒன்று இடிந்து விழுந்தது.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற தொழிலாளர்கள் இருவரையும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.