பண நெருக்கடியால் இளைஞர்கள் பின்வாங்கி விடக்கூடாது என்பதில் அரசு அக்கறை தெரிவித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் மகா கெலோ விளையாட்டு மைதான விழாவில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய அவர் இளைஞர்களின் உற்சாகத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றது ராஜஸ்தான் மண் என கூறியுள்ளார்.

விளையாட்டு திறமை மூலம் மூவர்ணத்தின் பெருமையை நாட்டுக்கு ராஜஸ்தான் அர்ப்பணித்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். ஜெய்ப்பூர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியுள்ளதாக கூறிய மோடி பணம் நெருக்கடியால் இளைஞர்கள் பின் வாங்கி விடக்கூடாது என்பதில் அரசு அக்கறை செலுத்தி வருவதாக தெரிவித்தார்.