பெங்களூருவில் தவறான வழியில் சென்றதாக வாகனங்களை தடுத்து தனது காரை சாலையில் நிறுத்திய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பெங்களூரு JC சாலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி காலை 11:30 மணியளவில் ஒரு நபர் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தவறான வழியில் வந்ததை அவர் அறிந்தார். அதனால் காரை நிறுத்திய அவர், அவர்களிடம் ” நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள்…தயவு செய்து யூ-டர்ன் எடுத்து சரியான வழியில் செல்லுங்கள்….நான் என் காரை நகர்த்த மாட்டேன்” என்று   கூறினார்.

அவரது வார்த்தையை கேட்டு சிலர் திரும்பி சென்ற நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நகராமல் காரின் முன்னே நின்று கொண்டிருந்தார் . இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் ” தவறான வழியில் செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் அதிகரிக்கும் நிலையில், அவர்கள் மீது அதிகாரிகள் சுயமாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார். மேலும் இந்த சம்பவம் பெங்களூரு சாலையில் விதிமுறைகள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றன என்பதை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது.