கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளாங்காடு பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிருஷ்ணா தேவி எம்.எஸ்.சி படித்து முடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணா தேவி பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணா தேவி தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கிருஷ்ணதேவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கிருஷ்ணா தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.