திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கீர்த்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பன்னீர் செல்வத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.