கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்விளை பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ், சந்தோஷ்(24) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் சந்தோஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு போலீஸ் அல்லது ராணுவ வேலையில் சேர முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் போலீஸ் மற்றும் ராணுவத்தில் சந்தோஷுக்கு வேலை கிடைக்காததால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று தென்னை மரத்திற்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று சாலையோரம் சந்தோஷ் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.