கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான அண்ணாமலைக்கும், பார்த்திபனுக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பார்த்திபன் அண்ணாமலையை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தயாரின் பேரில் வழக்குபதிவு செய்த பார்த்திபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.