மதுரை மாவட்டத்திலுள்ள கீழ வெளி வீதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினியும் மதுரையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஆண்டு மதுரையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் தம்பதியினர் ராமநாதபுரம் சிவன் கோவில் வடகரை வீதியில் இருக்கும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.