நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதகண்டியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிசிஏ பட்டதாரியான விசித்ரா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த விசித்ரா திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பிறகு அதே பகுதியில் இருக்கும் கிணற்றில் விசித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று விசித்ராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசித்ரா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றார்களா?என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.