மதுரை மாவட்டத்திலுள்ள கூலிப்பட்டியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபடி வீரரான சத்தியமூர்த்தி(27) என்ற மகன் இருந்துள்ளார். சமீப காலமாக துபாயில் வேலை பார்த்து சத்தியமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அவர் நண்பர்களுடன் மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களுக்கு பார்வையிட சென்றுள்ளார். மேலும் சில கபடி போட்டிகளிலும் கலந்து கொண்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி வீட்டிற்கு பின்புறம் இருக்கும் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதனால் ரத்த வெள்ளத்தில் சத்தியமூர்த்தி இறந்துவிட்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கூலிப்பட்டியை சிவா(22), திருப்பதி(23) ஆகிய இரண்டு பேர் இராமநாதபுரம் நீதித்துறை நடுவர் இரண்டாவது நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தி படுகொலை தொடர்பாக சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.