திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த திலகன் ஆகியோர் திருமண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராஜாவுக்கும் குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரேசன், கதிரேசன், திலகன் ஆகிய மூன்று பேரும் ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பால் தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ராஜாவின் தாய் திருமால் கனியையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசன் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
திருமணமான 10 மாதத்தில் தகராறு…! பேசாமல் இருந்த கணவர்…. கடைசியில் நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் சேர்ந்தவர் கிருத்திகா(21). இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…
Read more“என் மகனே கொன்னுட்டானே….” கால்நடைகளை பார்த்து கதறி அழுத முதியவர்…. மனைவியுடன் வாழ்வாதாரம் இன்றி தவிப்பு…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(70). இவர் விவசாயி. இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசன் தனது பெற்றோரை விட்டு பிரிந்து வாழ்கிறார். அடிக்கடி தந்தைக்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு…
Read more