கரூர் மாவட்டத்திலுள்ள கானாபுதூர் காலனியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்த் என்பவருக்கும் இடையே வீட்டிற்கு அருகே குப்பைகள் கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரன் வீட்டில் இருந்தபோது ஆனந்த் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த பெரியசாமி உள்ளிட்டோர் லோகேஸ்வரனிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர் லோகேஸ்வரனை கத்தியால் குத்திவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த லோகேஸ்வரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.