தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்து டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரசாந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.