சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி அல்லிகுட்டை காலனியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி ஆனந்த் முருகன் நகர் பகுதியில் சென்றார்.

அப்போது அங்கு வந்த சிலருக்கும் ஆனந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அவர்கள் ஆனந்தை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த தயாளன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.