தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராமியம் பட்டி பகுதியில் 75 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் மட்டைகளை வெட்ட அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திக் மூதாட்டியின் வீட்டிற்கு சென்றார்.

இதனையடுத்து கார்த்திக் திடீரென மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மூதாட்டி அலறி சத்தம் போட்டதால் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் மூதாட்டி அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.