கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் திடீர் குப்பத்தில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் தமிழரசியின் ஸ்கூட்டருக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை பார்க்க அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

பொதுமக்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த தமிழரசி தனது ஸ்கூட்டர் எரிக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தமிழரசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.