தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பத்து தல திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் சிம்பு சமீபத்திய ஒரு பேட்டியில் கூறினார். அவர் பேசியதாவது, நான் பத்து தல திரைப்படத்தில் நடித்ததற்கு காரணம் கௌதம் கார்த்திக் தான். கௌதம் கார்த்திக் கஷ்டப்பட்டாலும் அவர் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.

கஷ்டத்தை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்பவர்கள் வாழ்க்கையில் தோற்பதற்கு வாய்ப்பே இல்லை. சில சண்டை காட்சிகளில் ஹீரோக்கள் நடிக்கும்போது ஏன் இவர்கள் எல்லாம் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறார்கள் என்று தோன்றும். அதிரடி சண்டை காட்சிகளில் நடிப்பது மிகவும் கஷ்டம். எல்லா  ஹீரோவாலும் ஆக்சன் காட்சிகளில் ரசிகர்களை திருப்தி படுத்த முடியாது. ஆனால் கௌதம் கார்த்திக் சண்டை காட்சிகளில் திருப்திகரமாக நடித்தார். அவருடைய சண்டை காட்சியை நான் அருகில் இருந்து பார்த்து ரசித்தேன். என் மீது ஏ.ஆர் ரகுமானுக்கு தனி பாசம் உண்டு. மேலும் பத்து தல திரைப்படத்திற்காக அவர் சிறந்த இசையை கொடுத்துள்ளார் என்று கூறினார்.