ஐந்து மாநில தேர்தலில் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி, ஆமாம்..!  பின்ன அவர் ஆட்சி அமைக்க மாட்டேன் என்றா சொல்ல முடியும். அவர் போய் ஆட்சி அமைப்போம் என்று தான் சொல்லுவாரு.  எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய இந்திய ஒற்றுமை பயணத்தின் உடைய விளைவு பொது மக்களையும் கவர்ந்திருக்கிறது.

இதுவரை என்ன நிகழ்ந்திருக்கிறது என்றால் ? எங்களுடைய கட்சிகாரர்கள்…. எங்களுடைய கூட்டணி கட்சிகாரர்கள் வாக்களித்தார்கள். ஆனால் ராகுல் காந்தியின் உடைய இந்திய ஒற்றுமை பயணத்திற்கு பிறகு,  பொதுமக்களும் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். அதனாலதான் கர்நாடகத்தில் ஜெயிச்சோம். லடாக்கில் ஜெயிச்சோம். எங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. எனவே இந்த ஐந்து மாநில தேர்தல்களில் அந்த வெற்றியை எட்டுவோம்.

அமலாக்கதுறை சோதனை,  வருமானவரி சோதனை அதிகரித்து வருவதை நீங்க எல்லாம் எதிர்த்து எழுதாதது ஏன் ?  நீங்க யாராவது வாய திறக்கறீங்களா ? ஊடகங்கள் அதை எதிர்க்க வேண்டாமா ? வருமான வரித்துறை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.