இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ 3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்..

மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது.ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 90 வீராங்கனைகளை வாங்க 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏலத்தில் அடிப்படையான தொகை 10 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா ஆகியோர் அதிக ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. ஸ்மிருதி மந்தனாவை வாங்க பெங்களூர், மும்பை அணிகள் முனைப்பு காட்டியது.