சீனாவில் சென் ஷிஜியாங் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கிராம அரசாங்கத்தின் பணக்காப்பாளரின் மனைவியை கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 1998 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

“நான் அந்த கொலையை செய்யவில்லை. குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக காவல்துறையினர் என்னை சித்திரவதை செய்கிறார்கள்” என்று நீதிமன்றத்திடம் கூறிய போது அவர்கள் அதனை நம்பவில்லை. இதைத்தொடர்ந்து பல வருடங்கள் தனது வாழ்க்கையை சிறையில் கழித்து வந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார்.

பின்னர் தொழிலதிபரான ஷென் தனது 2019 ஆம் ஆண்டு வணிக உலகில் நுழைந்த நிலையில் பல விருதுகளை பெற்றார். தற்போது அவர் ஒரு ஸ்மார்ட் கழிப்பறை நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்நிலையில் தான் அந்த கொலையை செய்யவில்லை. அந்த கொலையை செய்தவருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். எனவே உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 60 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.