பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் அமோக வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்திருந்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் அடங்கிய “நாம் 2023” என்று பெயரில் மாத காலண்டரை பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காலண்டர் வெளியீட்டு விழாவில் நடிகை சுகாசினி, நடிகர் ஜெயம் ரவி, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் “நாம் 2023” மாத காலண்டர் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.