பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்சில் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு தனலட்சுமியை அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு போகும் முன்பே பிரசவ வலி அதிகரித்ததால் அவசரகால மருத்துவ உதவியாளர் ஆனந்தராஜ் தனலட்சுமிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும், சேயும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளித்த ஆனந்தராஜ் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை தனலட்சுமி உறவினர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.