
திமுகவுக்கு இதுவரை அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டெட் ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதோடு 2024 ஆம் ஆண்டு திமுக போட்டியிடும் தொகுதிகளில் எதிர் வேட்பாளரை நிறுத்தப்படும் அறிவித்துள்ளனர். சமவேலைக்கு, சம ஊதியம் கேட்டு ஐந்து நாட்களாக அவர்கள் சென்னையில் போராடி வருகின்றனர். இன்று அமைச்சர் அன்பில் மகேஷ்சுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த முடிவு எடுத்துள்ளனர்.