
நெல்லை ராயபுரத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது. அப்போது அரசுக்கு 4.56 கோடி கடன் இருந்தது. தற்போது அந்த தமிழக அரசு அந்தக் கடன் தொகைக்கு வட்டியையும், கடன் தொகையையும் திருப்பி செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு மட்டுமே 49 ஆயிரம் கோடி கடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.
இப்போது தமிழக அரசுக்கு 8.33 லட்சம் கோடி கடன் உள்ளது. 15 ஆவது நிதிக்குழு ஒரு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. அந்த இலக்கிற்கு உட்பட்டு தான் இந்த கடன் இருக்கிறது. தமிழக அரசு திவாலாகும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் கடன் சுமையால் திவாலாகும் நிலை தமிழக அரசு ஒருபோதும் வராது என்று அவர் கூறியுள்ளார்.