
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பசி பட்டினி, இருட்டு திருட்டு, முறையற்ற நிர்வாகம், மணல் கொள்ளை போன்றவற்றையே திமுக அதிமுக கொள்கையாக கொண்டுள்ளன.
அந்த 2 கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதேபோன்று பாஜக கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கொடிகளில் மட்டும்தான் வேறுபாடு உள்ளது கொள்கை வேறுபாடு கிடையாது. இவர்களுக்கு மாற்று அவர்களை கூறுவது சரியல்ல. இதை நம்பி ஏமாறுவது தான் பெருத்த ஏமாற்றம். அமலாக்கத்துறை சோதனை செய்ததால் தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தற்போது பிரதமர் மோடியை சந்திக்க செல்கிறார்.
3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதவர் இந்த ஆண்டு மட்டும் செல்வது ஏன்? நாட்டில் நீதிமன்றம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால் சட்டமன்றம் எதற்கு? நாடாளுமன்றம் எதற்கு? அவற்றை கலைத்து விடலாம் என்று தெரிவித்தார்.