தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அப்போது நடிகர் அஜித் பற்றிய ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்தார். அதாவது சென்னை 68 திரைப்படம் ரிலீஸ் ஆனபோது இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த நபர் நானும் சென்னை 68 தான். நான் நன்றாக பௌலிங் போடுவேன்.

நல்ல பேட்டிங் ஆடுவேன். உங்கள் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டுள்ளார். முதலில் அந்த நபர் யார் என்பது வெங்கட் பிரபுவுக்கு தெரியவில்லை. அதன் பிறகு தான் பேசியது தல அஜித் என்பது தெரிய வந்துள்ளது. நடிகர் அஜித் இதுபோன்று தன்னை நன்றாக கலாய்ப்பார் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.