தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கடந்த சில வருடங்களாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டினை தெரிவித்து பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாடகி சின்மையி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டில் எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சின்மயி வெளியிட்டுள்ள பதிவில், சினிமா துறையில் பல்வேறு விதமான பாலியல் குற்றச்சாட்டுகள் அரங்கேறி வருகிறது.

உங்கள் நண்பர் கவிஞர் வைரமுத்து மீது 17 பெண்கள் இதுவரை பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் உங்கள் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார். இதனால் அவரைப் பற்றி பெண்கள் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் கட்சி தான் தமிழகத்தில் அவரை முன்னிலைப்படுத்துகிறது. தமிழ் சினிமாவில் 5 வருடங்கள் பணி செய்ய தடையுடன் அதை எதிர்த்து வழக்கு பதிவு செய்து போராடி வருகிறேன். இந்த வழக்கு இன்னும் 20 வருடங்கள் கூட நடந்தாலும் அதை எதிர்கொள்ள எனக்கு பலன் இருக்கிறது. கவிஞர் வைரமுத்து மீது முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பதிவிட்டுள்ளார்.