தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வீரசிம்கா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் பேட்டி ஒன்றில் இயக்குனர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஹீரோயின்களை பனியில் டான்ஸ் ஆட சொல்கிறார்கள். எனக்கு பனியில் நடனமாட பிடிக்காது. ஹீரோ மட்டும் உடை அணிந்து கொள்ளலாம். ஆனால் நான் மட்டும் வெறும் சேலை மற்றும் பிளவுஸ் அணிந்துதான் பனியில் நடனம் ஆட வேண்டும். இதை தயவு செய்து நிறுத்துங்கள். இதை நான் இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பனியில் நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.