கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்றால் அவர் மீண்டும் தமிழகத்திற்கு திரும்ப முடியாது என மிரட்டல் விடுத்த  அண்ணாமலைக்கு ஆடு ஆடாக இருக்கணும். ஓவராக பேசுனா பிரியாணி போட்டு விடுவோம் என ஆர்.எஸ் பாரதி பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் ஆர்.எஸ். பாரதியின் மிரட்டலுக்கு யார் பிடித்தாலும் அரிவாள் வெட்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிகவும் காட்டமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆர்.எஸ். பாரதி பேசியது:

ஆர். எஸ் பாரதி பேசிய போது அண்ணாமலை சவால் விட்டு இருக்கிறார். பெங்களூருக்கு தளபதி போனால் அவரை எதிர்த்து முற்றுகை பண்ணுவாராம். நான் திருச்சியில் சொல்லிவிட்டு போகிறேன். நீ ஆண் மகனாக இருந்தால்… தைரியம் இருந்தால்… துணிச்சல் இருந்தால்…. உப்பு போட்டு சோறு தின்பவராக இருந்தால்… தளபதி வருகிறபோது தடுத்துப் பார். பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். ஆட்டுக்குட்டிகளுக்கு சொல்றேன்… திமுக தொண்டன் நினைத்தால்…. ஆடு ஆடாக இருக்கணும்னா ? ஆடு ஆடாக இருந்தால் வெச்சிருப்போம். அளவுக்கு மீறி ஆடு வாலாட்டுச்சுன்னா…  ஆட்டை பிரியாணியாக்கிடுவோம். திமுக காரனுக்கு தெரிந்த ஒன்று என்று தெரிவித்தார்.

அண்ணாமலை பேசியது:

ஆர்.எஸ் பாரதி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  ஆர் எஸ் பாரதி அவர்கள் பேசுகின்ற பேச்சுக்கும்,  அவரது வயசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருக்கின்றது. அண்ணன் ஆர்.எஸ் பாரதி அவர்கள் ஒரு மூத்த அரசியல்வாதி. தமிழகத்தில் இருக்காங்க. அவர்கள் பேசுகின்ற பேச்சில் ஒரு தரம் இருக்க வேண்டும். என்னுடைய தொண்டர்கள் வந்து அண்ணாமலையை பிரியாணி போட்டுருவாங்க  அப்படின்னா….

இது எல்லாம் அருவா புடிச்ச கை. மரத்தை அரிவாள் வச்சி வெட்டிய கை… நாளை காலையில் தோட்டத்தில் அருவா புடிச்சு மரத்தை வெட்ட தான் போகின்றேன். நாளைக்கு காலைல தோட்டத்தில் விவசாயம் பார்க்க போறேன். அரிவாள் யார் பிடித்தாலும் வெட்டத்தானே செய்யும்.  ஒரு விவசாய பிடிச்ச அருவா நல்லாவே வெட்டும். அதனால் ஆர்.எஸ் பாரதி அண்ணன் இந்த பயமுறுத்தி தமிழ்நாட்டுல அரசியல் பண்ணுவேன்னு நினைச்சா…. அதெல்லாம் எங்க கிட்ட நடக்காது. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஒரு கன்னத்துல அடிச்சீங்கனா… ஒரு கன்னத்தை காட்டுவதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றேன் என தெரிவித்தார்