
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் காலாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. அதன்படி 11 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியுள்ள நிலையில், இன்று முதல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைகிறது.
இதைத்தொடர்ந்து காலாண்டு விடுமுறை வரும். அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக காலாண்டு விடுமுறை 5 நாட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கிறது.