மாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற 79 வயதான ஒரு மூதாட்டி திடீரெனக் காணாமல் போன சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆனால், அவரது பேரனின் அதிநவீன, புத்திசாலித்தனமான யோசனை அவரை கண்டுபிடிக்க உதவியது. அந்த மூதாட்டி அணிந்திருந்த கழுத்தணியில், அவரது பேரன் பொருத்தியிருந்த ஜிபிஎஸ் டிராக்கர் கருவியின் மூலம், வீட்டிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அவரை கண்டுபிடிக்க முடிந்தது.

நளசோப்பாராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அந்தப் பாட்டி, இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி செவ்ரி பகுதியில் சைரா பீ தாஜுதீன் முல்லா என்ற அந்த மூதாட்டியின் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதைத் தொடர்ந்து, அங்குச் சென்ற பாதசாரிகள் அவரை மாநகராட்சிக்குச் சொந்தமான கேஇஎம் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாட்டி வீடு திரும்பாததால் குடும்ப உறுப்பினர்கள் பதற்றமடைந்தனர். ஆனால், அவரது பேரன் முகமது வசீம் அய்யூப் முல்லா, கழுத்தணியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் சாதனத்தை உடனடியாகச் செயல்படுத்தியவுடன் அவர்களின் கவலைகள் மறைந்தன.

அந்தச் சாதனம், அவர் பரேலில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் இருப்பதை உறுதி செய்தது. அது செவ்ரியிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. உடனே, அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு விரைந்தனர். தலைக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட முல்லா, பின்னர் ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் சிகிச்சைக்கு நன்குப் பதிலளிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல், குருகிராம் நகரில் மாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற 32 வயதுப் பெண் காணாமல் போன வழக்கில், அவரது உடல் செக்டார் 29 இல் உள்ள மின் கட்டடத்தின் அருகே புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது நம்பிக்கைத் துரோகம், வன்முறை மற்றும் கொலையை மறைக்க எடுத்த முயற்சியின் கதையாக மாறியுள்ளதாகக் குருகிராம் காவல்துறை தெரிவித்துள்ளது.