செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கும் முகமாக என்னென்ன விஷயங்களை கவனம் கொடுத்து செய்ய வேண்டும் என்பது குறித்து பாஜக  கூட்டத்திலே விவாதிக்கப்பட்டது, கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒரு வெற்றிகரமான ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும். மூன்றாவது முறையும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்கின்ற பார்வையின் அடிப்படையில் கோட்டத்தில் பேசி உள்ளோம்.

பாராளுமன்ற தேர்தல் முடியும் வரைக்கும் இருக்கக்கூடிய இந்த ஏழு மாத காலம் இதற்கு உண்டான பணிகள், வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனுடைய அடிப்படையில் வருகின்ற தேர்தலை சந்திப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் உடைய அனைத்து சகோதர சகோதரிகளும் முழுமூச்சோடு,  முழு வேகத்தோடு,  ஈடுபாட்டோடு களமிறங்கி பணிபுரிய வேண்டும் என்று முடிவு செய்துள்ளம்.

பாரதிய ஜனதா கட்சி பொருத்தவரை பாராளுமன்ற தேர்தல் 2024ல வருது. அதற்கு முன்னாடியே கூட ஐந்து மாநில தேர்தல்கள் நடக்க இருக்கின்றது. இந்த ஐந்து மாநில தேர்தல்களிலும் முழு கவனம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் பாரதிய ஜனதா கட்சியும் இருந்து கொண்டிருக்கின்றது.

வி.பி துரைசாமி அவர்கள் சொன்ன கருத்தை பற்றி சொல்லுகின்றேன்.  அவர் அந்த கூட்டத்தில்  கலந்து கொள்ளவில்லை. தினமும் ஆபீசுக்கு வரக்கூடிய நேரத்தில் நீங்கள் சில கேள்விகளை கேட்டிருக்கலாம். அவருடைய மனதில் என்ன தோன்றுகிறதோ,  அதை சொல்லி இருக்கலாம். அவர் சொன்னது தான் பாஜக கூட்டத்தினுடைய  முடிவு என்று நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருந்தால் ? அது அவருடைய தவறும் கிடையாது, உங்களுடைய  தவறும் கிடையாது. இதை பெருசு பண்ண வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.