பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினியாக ஜனனி போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி பாதியிலேயே வெளியேறினாலும் பெரியளவில் ரசிகர் கூட்டம் அவருக்கு கிடைத்துள்ளது. அதோடு ஜனனி தற்போது விஜய்யின் அடுத்த படமான தளபதி67 திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது  தொடர்பாக ஜனனி நேற்று நடந்த பிக்பாஸ்-6 பைனலில் பேசி உள்ளார். அதாவது, “பல மக்களுக்கு என்னை தெரியவேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன்.

அது தற்போது நடந்துவிட்டது. மக்கள் நிறைய அன்பு கொடுத்து இருக்கின்றனர். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவங்க வீட்டு பிள்ளை போல என்னை பார்க்கின்றனர். நான் வந்த வேலை முடிந்து விட்டது” என ஜனனி கூறினார். இந்நிலையில் பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் ஊருக்கு(இலங்கைக்கு) போனீங்களா என ஜனனியிடம் கமல் கேட்க, இல்லை என பதில் கூறினார். மேலும் “வீட்டிற்கு திரும்ப முடியாத அளவிற்கு இங்க வாய்ப்பு வந்திருக்கிறது உங்களுக்கு” என்று கமல் மறைமுகமாக விஜய் 67 திரைப்படம் பற்றி கேட்க, ஆமா sir என பதில் கூறினார் ஜனனி.