கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த அங்கித் ஜெயின் சென்னை மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இதனால் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலிஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த ஆரோக்கிய ராஜ் விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்ட ஆரோக்யராஜிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பிற போலீசார் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நிருபர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது, விருதாச்சலம் உட்கோட்ட காவல் சரகத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் போட்டு 24 மணி நேரமும் ரோந்து பணி நடைபெறும். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். பொதுமக்கள் என்னை நேரில் சந்தித்தும் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.