மகாராஷ்டிரா ஷீரடியில் இரவு விமான சேவை விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஷீரடி விமான நிலையத்தில் இரவு வேளைகளில் விமானங்கள் சேவை மேற்கொள்ள உள் நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் எந்த பகுதியிலுள்ள மக்களும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஷீரடியிலுள்ள சாய்பாபா கோயிலை தரிசிக்கும் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மும்பை-ஷீரடி இடையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி துவங்கி வைத்த நிலையில், விமான சேவைக்கும் அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.