பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளப்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அயோத்தியாபட்டணம் சோதனை சாவடி அருகே போலீசார் மனோகரனை வழிமறித்து ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அப்போது மனோகரன் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். அதற்கு போலீசார் பணத்தை செலுத்தி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து செல்லும்படி கூறியுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து மனோகரன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னிடம் போலீசார் பணம் கேட்டு மிரட்டுவதாக சேலம்- சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.