தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் சமீபத்தில் மரணம் அடைந்தார். நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் அஜித்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருக்கு ஆறுதல்கூறினார். இந்நிலையில் அஜித்தின் வீட்டிற்கு செல்வதற்கு நடிகர் விஜய் போட்ட கண்டிஷன் பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அதாவது நடிகர் விஜய் அஜித்தின் வீட்டிற்கு செல்வது தெரிய வந்தால் அவருடைய ரசிகர்கள் அஜித்தின் வீட்டின் முன்பு குவிந்து விடுவார்கள்.

ஏற்கனவே துக்கத்தில் இருக்கும் அஜித்துக்கு இது தொல்லையாக இருக்கலாம் என்பதால் நடிகர் விஜய் தான் அஜித் வீட்டிற்கு செல்லும் தகவலை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளாராம். விஜய் அஜித்தின் வீட்டிற்குள் சென்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு வெளியே வந்துள்ளார். நடிகர் விஜய் காரில் ஏறும்போது தான் பத்திரிக்கையாளர்கள் அவரை பார்த்து உள்ளனர். உடனே நடிகர் விஜயிடம் சென்று ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறோம் என்று கேட்டுள்ளனர். அதற்கு விஜய் இப்போதைக்கு போட்டோ வேண்டாம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாராம். மேலும் இதனால் தான் அஜித் வீட்டிற்கு விஜய் சென்ற புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.