தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் கதையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தேன். இதில் அஜித் சார் பக்கம் எந்த தப்பும் இல்லை. படத்தின் ஸ்கிரிப்ட் படி இரண்டாம் பாதி தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. அந்த வாய்ப்பு தற்போது மகிழ் திருமேனிக்கு கிடைத்தது எனக்கு சந்தோஷமே என்று கூறியுள்ளார். மேலும் ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் அஜித்தை விட்டுக் கொடுக்காமல் பேசியது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.