தற்போது சோஷியல் மீடியாவில் திருமண வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் திருமணம் முடிந்ததும் மணமகன் உடனே மணமகளை தன்னுடன் அழைத்துச்செல்ல மறுத்து விடுகிறார் என்பதை காண முடிகிறது. திருமணத்துக்கு பின் தனக்கு வரதட்சணையாக பைக் வழங்க வேண்டும் எனவும் இல்லையென்றால் மணப் பெண்ணை அழைத்துச்செல்ல முடியாது எனவும் அவர் கூறுகிறார்.

இதனிடையே அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் தந்தைக்கு மாப்பிள்ளையின் செயலால் பயங்கரமாக கோபம் வந்தது. இவ்வாறு  வரதட்சனை கேட்டு மணமகன் செய்த செயலை பெண்ணின் தந்தையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் தன் செருப்பைக் கழற்றி மாப்பிள்ளையை அடிக்க ஆரம்பிக்கிறார். அதன்பின் தன் தவறை உணர்ந்து மாப்பிள்ளை அழுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அதனை தொடர்ந்து மாமனாரின் அடியால் மணமகன், மணமகளை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு சென்றார்.