சூன் 29 கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1194 – நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார்.1534 – இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார்.

1613 – இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது.

1659 – கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன.

1786 – ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் இசுக்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.

1807 – உருசிய-துருக்கிப் போர்: திமீத்ரி சென்யாவின் தலைமையிலான உருசியக் கடற்படை உதுமானியரை ஏதோசு சமரில் தோற்கடித்தது.

1814 – மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.[1]

1864 – கனடா, கியூபெக்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர்.

1880 – பிரான்சு தாகித்தியைக் கைப்பற்றியது.

1888 – ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.

1895 – சாரின் உருசியப் அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர்.

1900 – நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் “நோபல் அறக்கட்டளை” ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது.

1914 – சைபீரியாவில் கிரிகோரி ரஸ்புடின் மீது கொலை முயற்சி நடந்தது.

1950 – கொரியப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கொரியா மீது கடல் மார்க்கத் தடையை ஏற்படுத்துவதற்கு அனுமதி அளித்தார்.

1975 – ஸ்டீவ் வாஸ்னியாக் முதலாவது ஆப்பிள் I கணினியை சோதித்தார்.

1976 – சீசெல்சு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1995 – அட்லாண்டிசு விண்ணோடம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் முதல் தடவையாக இணைந்தது.

1995 – தென் கொரியாவின் சியோல் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் உயிரிழந்தனர், 937 பேர் காயமடைந்தனர்.

2002 – தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற கடற்படைச் சமரில், ஆறு தென்கொரிய வீரர்கள் கொல்லப்பட்டனர், வட கொரியப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.

2006 – குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் கைதிகளை இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்ய அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ் எடுத்த முடிவை ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்தது.

2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது.

2012 – அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைத் தாக்கிய நீள்சுழற்காற்றினால் 22 பேர் உயிரிழந்தனர்.

2014 – இசுலாமிய அரசு சிரியாவிலும் வடக்கு ஈராக்கிலும் தமது கலீபகத்தை நிறுவினர்.

2014 – நைஜீரியாவில் சிபோக் நகரில் உள்ள நான்கு கிறித்தவக் கோவில்களை இசுலாமியத் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கி, அங்கிருந்த குறைந்தது 30 பேரைக் கொன்றனர்.

2015 – சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்

1818 – ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (இ. 1878)1864 – அசுதோசு முகர்சி, வங்காளக் கல்வியாளர், வழக்கறிஞர், கணிதவியலாளர் (இ. 1924)

1868 – ஜார்ஜ் எல்லேரி ஏல், அமெரிக்க வானியலாளர், ஊடகவியலாளர் (இ. 1938)

1888 – அலெக்சாந்தர் ஃபிரீடுமேன், உருசிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1925)

1893 – பிரசந்தா சந்திரா மகாலனோபிசு, இந்தியப் பொருளியலாளர் (இ. 1972)

1900 – அந்துவான் து செயிந் தெகுபெறி, பிரான்சியக் கவிஞர், விமானி (இ. 1944)

1909 – தாமசு பறோ, ஆங்கிலேய இந்தியவியலாளர், சமற்கிருதப் பேராசிரியர் (இ. 1986)

1925 – ஆர். எஸ். மனோகர், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 2006)

1925 – ஜார்ஜியோ நபோலிடானோ, இத்தாலியின் 11வது அரசுத்தலைவர்

1931 – பி. கே. அய்யங்கார், இந்திய அணுசக்தி அறிவியலாளர் (இ. 2011)

1936 – எடி மாபோ, ஆத்திரேலியப் பழங்குடித் தலைவர் (இ. 1992)

1945 – சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இலங்கையின் 5வது அரசுத்தலைவர்

1947 – அனுராதா ரமணன், தமிழக எழுத்தாளர் (இ. 2010)

1973 – கார்த்திக் ராஜா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்

1978 – நிக்கோல் செர்சிங்கர், அமெரிக்கப் பாடகி, நடிகை

1990 – ஹரீஷ் கல்யாண், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இன்றைய தின இறப்புகள்

1861 – எலிசபெத் பிரௌனிங், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1806)1873 – மைக்கேல் மதுசூதன் தத்தா, இந்தியக் கவிஞர் (பி. 1824)

1895 – தாமசு என்றி அக்சுலி, ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1825)

1966 – தாமோதர் தர்மானந்தா கோசாம்பி, இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர் (பி. 1907)

2009 – வ. ஐ. சுப்பிரமணியம், தமிழக மொழியியலாளர் (பி. 1926)

2013 – மார்கரிதா ஏக், இத்தாலிய வானியற்பியலாளர் (பி. 1922)

2017 – சூலமங்கலம் ஜெயலட்சுமி, தமிழக கருநாடக இசைப் பாடகி (பி. 1937)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (சீசெல்சு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1976)முன்னாள் படைத்துறையினர் நாள் (நெதர்லாந்து)